திருமண நாள்; மனைவியுடன் திருப்பதியில் தரிசனம் செய்த அன்புமணி ராமதாஸ்

32வது திருமண நாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் திருப்பதியில் தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற…

32வது திருமண நாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் திருப்பதியில் தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் அவரது குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார். இன்று அவர்களது 32-ஆம் ஆண்டு திருமண தினத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு குடும்பத்தாருடன் அவர் சென்று இருந்தார்.

அண்மைச் செய்தி: ‘சென்னை வந்த சிங்கப்பூர் விமானம்; தரையிறங்க முடியாததால் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டது!’

சிறப்புத் தரிசனம் முடிந்த பிறகு கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் வேத ஆசீர்வாதம், தீர்த்த பிரசாதங்கள் அவருக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு அவர்கள் குடும்பத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.