அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ கூறவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான கு.ப. கிருஷ்ணன் மற்றும் வைத்திலிங்கம் கூட்டாக பேட்டி அளித்துள்ளனர்.
திருச்சி பொன்மலை, ஜி.கார்னர் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக முப்பெரும் மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன் மற்றும் வைத்திலிங்கள் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய கு.ப.கிருஷ்ணன், திருச்சியில் முப்பெரும் மாநாடு நிச்சியமாக நடைபெறும். அதிமுகவில் எங்களுக்கு இல்லாத உரிமை எவருக்கும் கிடையாது. யார் என்ன புகார் கொடுத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை என்றார்.அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றமோ, இந்திய தேர்தல் ஆணையமோ எந்த தடையும் விதிக்கவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக அதிமுக கொடியை கையில் பச்சை குத்தி இருக்கிறேன் யார் வந்து அழிப்பது, என் கை அறுத்து யார் எடுப்பார் என ஆவேசமாக கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், இரட்டை இலை சின்னம், அதிமுக கொடியை நாங்கள் பயன்படுத்துவோம் வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயாராக உள்ளோம். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தான். நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறினார்.