கடந்த ஆண்டை விட வணிகவரித்துறையில் 61 சதவீதம் வரி வருவாயும், பதிவுத்துறையில் 71 சதவீதம் வரி வருவாயும் உயர்த்தி உள்ளோம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், வணிகவரித்துறை சார்பிலான சென்னை வடக்கு நிர்வாக கோட்டம் மற்றும் நுண்ணறிவு கோட்டத்தை சேர்ந்த
அனைத்து அலுவலர்களுனான சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பின் செய்தியாளர்களிடம் பேசிய பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, கடந்த ஆண்டை விட வணிகவரித்துறையில் 61 சதவீதம் வரி வருவாயும், பதிவுதுறையில் 71 சதவீதம் வரி வருவாயும் உயர்த்தி உள்ளோம் என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த ஆண்டில் மண்டல வாரியாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தற்போது கோட்ட வாரியாக ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி, தர்மபுரியில் கூட்டம் நடைபெற்றதை அடுத்து தற்பொழுது சென்னை வடக்கு கோட்டத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் ஜி.எஸ்.டி. லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற கூட்டங்கள் நடைபெற்றதாக தெரியவில்லை என கூறிய அவர், இனி வரும் காலங்களில் இந்த துறையில் அதிக வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கமளித்தார்.
– இரா.நம்பிராஜன்