கொரோனா காரணமாகவே O2 படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்ததாக தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தெரிவித்துள்ளார்.
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள O2 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, யூடியூப் புகழ் ரித்விக், இயக்குநர் விக்னேஷ், இயக்குநர் பரத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது, மேடையில் பேசிய எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் விக்னேஷ் இந்த கதையை கொண்டு வந்ததும் இதில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என முடிவு செய்திருந்ததாக தெரிவித்த அவர், இந்த வாரத்தில் அவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளது. எங்கள் படகுழு சார்பில் அவர்களுக்கு வாழ்த்துகள் என தெரிவித்தார்.
திரையரங்கில் இந்த படம் வந்து இருந்தால் நல்லா இருந்திருக்கும். கொரோனா காரணமாக ஓடிடிக்கு இந்த படத்தை கொடுப்பதாக முன்பே முடிவு செய்து விட்டோம். தமிழ்நாடு கடந்து மற்ற மாநிலங்களிலும் ரசிகர்களை கவரும் என நம்புவதாக தெரிவித்தார். மேலும், கொரோனா காலத்தில் ஆக்சிஜன் தேவை என்பது அதிகமாக இருந்தது. அதை வைத்து தான் இந்த படத்தை உருவாக்கி உள்ளோம், O2 இதுவரை வந்த படங்களில் வித்தியாசமான படமாக இருக்கும் என குறிப்பிட்டு பேசினார்.
அண்மைச் செய்தி: ‘திரைப்பட பாணியில் இரிடியம் விற்பனை; 3 பேர் அதிரடி கைது’
தொடர்ந்து பேசிய கே 13 படத்தின் இயக்குநர் பரத், நயன்தாராவுக்கு ஒரு கதை உருவாக்கி இருந்தேன். ஆனால், எனக்கு அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது, அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு இயக்குநர் விக்னேஷ் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறிய அவர், தொழில்நுட்பமாக இந்த படத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். இயக்குநராக இருந்ததை விட நடிக்கும் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் என கூறினார்.
அப்போது பேசிய நடிகர் ரித்விக், அனைவருக்கும் நன்றி என்னுடைய முதல் படம் O2 அனைவரும் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், மீடியா தொடர்பாக தான் ஒரு வீடியோ நடித்ததாகவும், அந்த வீடியோ பெரிய அளவில் வைரல் ஆனதால், நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக அப்போது தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








