மக்களை நம்பி தனித்து போட்டியிடுகிறோம்: நயினார் நாகேந்திரன்

மக்களை நம்பி தனித்து போட்டியிடுகிறோம், தமிழகம் முழுவதும் பாஜக அமோக வெற்றி பெறும் என மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் இன்று…

மக்களை நம்பி தனித்து போட்டியிடுகிறோம், தமிழகம் முழுவதும் பாஜக அமோக வெற்றி பெறும் என மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்காக மாநிலம் முழுவதும் 31 ஆயிரத்து 29 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர்.திருநெல்வேலியில், பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் பள்ளிகள் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி தரப்பில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் மக்களை நம்பி நாங்கள் களத்தில் நிற்கிறோம். அதிமுக பணம் கொடுத்ததாக செய்தி வரவில்லை
.தனித்து களம் காணும் நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். காலையில் இருந்து தற்போது வரை அமைதியாக தேர்தல் நடைபெறுகிறது. போகப்போகத்தான் எவ்வாறு நடைபெறும் என்பது தெரியவரும்
என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.