மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், முன்னாள் மாநில செயலாளருமான கே. பாலகிருஷ்ணன், திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: “சட்டமன்றத்தில் மக்களுடைய அடிப்படையான பிரச்னைகளையோ, அதற்குத் தீர்வு காண்பதைப் பற்றியோ எதையுமே ஆழமாகப் பேசவில்லை. நாட்டில் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னை எனப் பல நெருக்கடிகள் இருக்கின்றன. இதைப் பற்றி எல்லாம் பேச முடியாத சூழல் உருவாகியுள்ளது” என்று கூறினார்.
ஒரு மாநில முதலமைச்சர், 8 கோடி மக்களுடைய முதல் தலைவர், முதல் பிரதிநிதி என்கிற முறையில், எதிர்க்கட்சிகள் ஆயிரம் விமர்சனங்கள் வைக்கட்டும். அதற்கு நிதானமாகப் பதில் சொல்லாமல், ‘சட்ட ஒழுங்கில் பிரச்னை என்னென்ன நடந்திருக்கிறது, நாங்கள் என்னென்ன செய்திருக்கிறோம், குற்றம் இருக்கிறது, குறை இருக்கிறது என்றால் நாங்கள் திருத்திக் கொள்கிறோம்’ என்று




