உங்களுக்கு எவ்வளவு தாய் மொழி பற்று இருக்கிறதோ அதே அளவு தமிழ்ப்பற்று எங்களுக்கும் இருக்கிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யா பீடம்
சார்பில் நடைபெற்ற 33வது வித்யா ஜோதி பட்டமளிப்பு மற்றும் 42வது சமய வகுப்பு
மாணவர் மாநாட்டில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கலந்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நாங்கள் ஹிந்தியை திணிக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிபாரிசு மட்டுமே செய்துள்ளனர். மாநில மொழிகளை குறைத்து மதிப்பிட வேண்டும் என்றோ, மாநில மொழிகளை மீறி செயல்பட வேண்டும் என்றோ நாங்கள் கூறவில்லை. ஆனால் இதை வைத்து அரசியல் செய்யவே மீண்டும் மீண்டும் இந்த போராட்டத்தை கையில் எடுக்கின்றனர்.
உங்களுக்கு எவ்வளவு தாய் மொழி பற்று இருக்கிறதோ, அதே அளவு தமிழ்ப்பற்று
எங்களுக்கும் இருகிறது. தமிழிசைக்கும் அதே பற்று இருக்கிறது. இதை ஞாயப்படுத்தி பேசினால், என்னை ஹிந்தி இசை என்று கூறுவதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஹிந்தி மொழி அதிகம் பேசும் மத்திய பிரதேசத்தில் தாய் மொழி வழி மருத்துவ கல்வி
முறையை கொண்டு வந்திருக்கின்றனர்.
இத்தனை வருடம் ஆட்சி செய்து என்ன செய்தீர்கள். ஏன் தமிழ் வழியில் ஒரு புத்தகம் கொண்டு வரமுடியாதா? தமிழ் வழியில் ஒரு மருத்துவ கல்லூரி கொண்டு வர முடியாதா?
அப்படிப்பட்ட முயற்சிகளை எடுங்கள். இதையே சொல்லிக்கொண்டு இருக்காமல்
தமிழில் புது புது முயற்சிகளை செய்து நீங்கள் உண்மையிலேயே தமிழுக்கு தொண்டாற்றுகிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துங்கள்” என்று தெரிவித்தார்.