காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கன அடியிலிருந்து 3500 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர் வரத்தானது குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் காவேரி கரையோரங்களில் பெய்து வரும் கோடை மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதனால் தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் நேற்றைய நிலவரப்படி விநாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போதைய நிலவரப்படி விநாடிக்கு 3500 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்தின் காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







