கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு-அமைச்சர் அறிவிப்பு

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார். இதனால், கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக கூட்டறவு…

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

இதனால், கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக கூட்டறவு அமைச்சர் பெரியசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 112 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் உயர்வு குறித்த கோரிக்கையினை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அவர்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த அரசு அவர்களுக்கான 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தப்படும் ஊதிய உயர்வினை தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி 01.01.2020 முதல் ஊதிய உயர்வு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. சங்கங்களின் வகைப்பாட்டிற்கேற்ப 23 சதவிகிதம் வரை ஊதியம் அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வினால் பணியாளர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ.2,259/-ம், அதிகபட்சமாக ரூ.14815/-ம் ஊதிய உயர்வு கிடைக்கும். வேளாண்மை உற்பதிதியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரிந்துவரும் 1675 பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்று அவரது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.