உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் நீண்ட நாட்களாக தங்கள் தொகுதியில் நிறைவேற்றப்படாத பத்து கோரிக்கைகளை பட்டியலிட்டு அரசின் கவனத்திற்கு முன்வைத்துள்ளனர். அவற்றை பார்ப்போம்
1. உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, சாலவாக்கத்தை தனி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2. உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட திருமுக்கூடல், மதூர், பொற்பந்தல், சிறுதாமூர், அரும்புலியூர், அருங்குன்றம், பழவேரி உட்பட பல்வேறு இடங்களில் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகலும், கல்லுடைக்கும் கிரஷ்சர்கலும் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல் குவாரிகளை மூட வேண்டும், மேலும் புதிய 5 கல்குவாரிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதை ரத்து செய்ய வேண்டும்.
3. உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
4. வாலாஜாபாத் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றினை ஏற்படுத்த வேண்டும்.
5. உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உத்திரமேரூர் பகுதியில் தொழில்பூங்கா ஒன்றை அமைக்க வேண்டும்.
6. உத்திரமேரூரில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
7. உத்திரமேரூர் அரசு பேருந்து பணிமனையில் நகரப் பேருந்துகள் 18, கிராம பேருந்துகள் 9, கூடுதல் பேருந்துகள் 4 என மொத்தம் 31 பேருந்துகள் உள்ளது, இதனை முறையாக இயக்க வேண்டும்.
8. உத்திரமேரூர் அடுத்த நெய்யாடுபாக்கம் பாலாற்றில் இருந்து வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட இளையனார்வேலூர் வரை பாலாற்றில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.
9. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் மன்னர் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்ட வைரமேக தடாகம் என்னும் பெரிய ஏரியை தூர் வார வேண்டும்
10. உத்திரமேரூரில் உள்ள அரசு வட்டார மருத்துவமனையை மேம்படுத்தி ஸ்கேன் வசதியும், அருவை சிகிச்சை மையமும் ஏற்படுத்தி, போதுமான மருத்துவர் மற்றும் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.