முக்கியச் செய்திகள்சினிமா

VJS51 – திரைப்படத்தின் முக்கிய அப்பேட் நாளை வெளியாகிறது!

விஜய் சேதுபதியின் 51வது திரைப்படத்தின் தலைப்பை நாளை அறிவிக்க உள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின் ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், இவரின் 50-ஆவது படமான  “மகாராஜா” விரைவில் வெளியாக உள்ளது. குரங்கு பொம்மை படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் 51வது படத்தின் தலைப்பு நாளை வெளியாகும் என தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் சேதுபதியின் 51 வது படத்தை ஆறுமுககுமார் என்ற இயக்குனர் இயக்கி வந்தார் என்பது குறிப்பிடதக்கது. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ஓரிருநாள் மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்கிறது – இபிஎஸ் குற்றச்சாட்டு

Web Editor

குழந்தைகள் சிகப்பாக பிறந்ததால் சந்தேகம்.. காதல் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை..!

Web Editor

“இந்திய மக்களுக்கும் சங்பரிவாருக்கும் இடையே நடக்கும் போர் இது” – விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading