விஜய் சேதுபதியின் 51வது திரைப்படத்தின் தலைப்பை நாளை அறிவிக்க உள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின் ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், இவரின் 50-ஆவது படமான “மகாராஜா” விரைவில் வெளியாக உள்ளது. குரங்கு பொம்மை படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் 51வது படத்தின் தலைப்பு நாளை வெளியாகும் என தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
here we are ❤️❤️❤️
Let’s Begin🔥#VJS51#VijaySethupathi51
Updates Loading ▶️▶️▶️#MakkalSelvan @VijaySethuOffl @Aaru_Dir @justin_tunes @rukminitweets @iYogiBabu @R_Govindaraj @rajNKPK @DivyaPillaioffl @Denes_Astro @yogeshdir @thinkmusicindia @proyuvraaj @sathishoffl pic.twitter.com/pbeGGGuJyM
— 7Cs Entertaintment (@7CsPvtPte) May 16, 2024
விஜய் சேதுபதியின் 51 வது படத்தை ஆறுமுககுமார் என்ற இயக்குனர் இயக்கி வந்தார் என்பது குறிப்பிடதக்கது. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.