ஜூன் 13-ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்கள் மாணவ,
மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் 21வது ஆண்டு பொதுக்குழு மாநில மாநாடு
தஞ்சையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளன. மாணவ, மாணவிகள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும். முதல் 5 நாள்கள் நல்லொழுக்கத்தை போதிக்கும் வகுப்புகள் நடத்தப்படும். இதில், என்ஜிஓக்கள் மற்றும் காவல் துறையினர்
உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு நல்லொழுக்கங்களை அறிவுரையாக
வழங்குவர்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு
வருகிற ஜூலை அல்லது செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும். மாணவர்கள்
பயப்படாமல் அந்த தேர்வை எழுத முன்வர வேண்டும் என்றார்.
-ம.பவித்ரா







