விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை, வெளியூர் செல்லும் பயணிகள் : மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு, வெளியூா் செல்லும் பயணிகளுக்காக கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது : எதிர்வரும்…

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு, வெளியூா் செல்லும் பயணிகளுக்காக கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :

எதிர்வரும் திங்கள்கிழமை (18.09.2023) அன்று விநாயகர் சதுர்த்தி பொது விடுமுறை அறிவிப்பை தொடர்ந்து, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிகாக நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, இன்று 15.09.2023 மட்டும் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ இரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.