தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு, இன்று அதிகாலை மூச்சுதிணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்திற்கு மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்து, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, அவர் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும், தேமுதிக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: