முக்கியச் செய்திகள்இந்தியா

ஐஸ்வர்யா ராயின் மகள் குறித்த வீடியோக்களை நீக்க வேண்டும்- டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா குறித்த வீடியோக்களை நீக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிரபல பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் உடல்நலம் சரியில்லை என்றும் அவருக்கு அரிய வகை நோய் உள்ளதாகவும் யூடியூப் சேனல்கள் சமீபத்தில் வதந்தி ஒன்றை பரப்பின. இதையடுத்து தவறான உள்நோக்கத்துடன் வதந்தியை பரப்பிய சுமார் 10 யூடியூப் சேனல்கள் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆராத்யா பச்சன் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில், அந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர்கள் செய்த தவறுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும். தான் மைனர் என்பதால் ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி. ஹரி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆராத்யா பச்சனின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை வெளியிடுவதை இணையதளங்கள் நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், பிரபலங்களின் குழந்தையாக இருந்தாலும் சரி, சாமானியரின் குழந்தையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு குழந்தையும் மரியாதையுடன்நடத்தப்படுவதற்கு உரிமை உண்டு. குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது முற்றிலும் சகிக்க முடியாதது என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ராமரிடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி..! – திருச்சியில் திருமாவளவன் எம்.பி. விமர்சனம்

Jeni

12-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு

Halley Karthik

2024 மக்களவை பொதுத்தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்க வாய்ப்பு!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading