#RailwayTrackல் மாட்டிக் கொண்ட கால் – சாதுர்யமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்ட பெண்ணின் Video Viral!

ரயில் தண்டவாளங்களுக்கு இடையே பெண்ணின் கால் சிக்கிக் கொண்ட நிலையில் துரிதமாக செயல்பட்ட அப்பெண் தப்பித்து அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார். தெலங்கானா மாநிலம் விகாராபத் மாவட்டத்தில் உள்ளது நவான்ஹி ரயில் நிலையம்.  இந்த ரயில்…

ரயில் தண்டவாளங்களுக்கு இடையே பெண்ணின் கால் சிக்கிக் கொண்ட நிலையில் துரிதமாக செயல்பட்ட அப்பெண் தப்பித்து அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார்.

தெலங்கானா மாநிலம் விகாராபத் மாவட்டத்தில் உள்ளது நவான்ஹி ரயில் நிலையம்.  இந்த ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் பல பொதுமக்கள் வழக்கமாக கடந்து செல்வர்.

இந்த நிலையில் பெண் ஒருவர் தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது அவருடைய ஒரு கால் தண்டவாளங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது. அந்த பெண் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட காலை எடுக்க பெரும் முயற்சி செய்தார் ஆனால். அவரால இயலவில்லை.

அதே நேரத்தில் அந்த வழியாக சரக்கு ரயில் ஒன்று  தண்டவாளம் வழியாக வேகமாக வந்து
கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ரயில் வரும் சத்தம் கேட்டதை சட்டென உணர்ந்த அப்பெண் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டது என்பதை உணர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட அந்த பெண் ஒரு வினாடி கூட தாமதிக்காமல் தண்டவாளங்களுக்கு இடையே தன்னுடைய உடலை குறுக்கி படுத்துக்கொண்டார். எனவே அவர் மீது ரயில் மோதாமல் அந்த சரக்கு ரயிலின் அனைத்து பெட்டிகளும் கடந்து சென்றது.

அதன் பின்னர் அந்த பெண் ரயில் கடந்து விட்டதா என்பதை கவனித்து எழுந்து
தண்டவாளங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்த தன்னுடைய காலை பத்திரமாக எடுத்து அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் பார்ப்போரை அச்சத்திற்குள்ளாக்கியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.