வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு, இன்று தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணிலிருந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றி கண்ட இந்தியாவின் முதல் அரசி, சமூக, சமய நல்லிணக்கத்தைப் பேணிய எங்கள் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







