கல்வி உரிமை சட்டத்தைப் போல் உடல் நலனுக்கான உரிமைக்கும் சட்டமசோதாவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வரவேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், சுகாதார வசதிகளை குடிமக்களுக்கு செய்து தரவேண்டியது அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தின் கடமை என்று உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியதை சுட்டிக்காட்டியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-வது நிதிக் குழுவின் கீழ் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவும் ‘சுகாதார வசதிகளுக்கான உரிமையை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்க வேண்டும்’ என்று பரிந்துரைத்துள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியின் போது கல்வி, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டதைப் போன்று, சுகாதாரத்துக்கான உரிமையை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்குவதற்கு ஏற்ப அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.
எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இதற்கான சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வரவேண்டும் என ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.