முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அசாமில் வந்தே பாரத் ரயில் சேவை – கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

உள்கட்டமைப்பு கட்டுமானத்திற்கு முன்னுரிமை அளித்து உண்மையான சமூக நீதியை பாஜக அரசு நிலைநாட்டியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அசாமில் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரியில் இருந்து அசாமின் கவுகாத்தி வரை வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வந்தே பாரத் விரைவு ரயில் சேவை அசாமின் சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிக்கும் என தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு ஏழைகளின் நலனுக்கு அதிக முன்னுரிமை அளித்ததாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள் : 2020 வீழ்ச்சி, 2021 கோப்பை, 2022 வீழ்ச்சி, 2023…?? – கம்பேக் கொடுக்குமா தோனி & கோ??

கடந்த ஆட்சியில் உள்கட்டமைப்பு அனைவருக்கும் சமமாக இல்லை எனக் கூறிய அவர், உள்கட்டமைப்பு கட்டுமானத்திற்கு முன்னுரிமை அளித்து உண்மையான சமூக நீதியை பாஜக அரசு நிலைநாட்டியதாக கூறினார். மேலும், முந்தைய ஆட்சியால் வடகிழக்கு மக்கள் நீண்டகாலமாக வளர்ச்சியின்றி இருந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

திமுகவை பழிக்கு ஆளாக்காதீர்கள்- பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

EZHILARASAN D

விரைவில் உருவாகும் ‘மரகத நாணயம் 2’ – உறுதி செய்த இயக்குநர்!

Web Editor

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: விசாரணையில் குறைபாடு – தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர்

Web Editor