முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கண்ட பெருங்கனவுகளில் ஒன்றான சுயாட்சி பெற்று தருவதே அவருக்கு இந்திய அரசியல் செய்யக்கூடிய மிகப்பெரிய காணிக்கை என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவுநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் பாடலாசிரியர் வைரமுத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதி உடலால் மறித்திருக்கலாம் ஆனால் செயலால் வாழ்கிறார் வாழ்க்கை என்பது மரணத்தை வெல்வதற்கு ஒரு மனிதனுக்கு கிடைக்கிற வாய்ப்பு என்று கருத வேண்டும். தான் வாழ்ந்த ஒவ்வொரு நாளிலும் மரணத்தை வெல்வதற்கான பணிகளை செயல்களை சாதனைகளை சரித்திர சம்பவங்களை உருவாக்கி இருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருக்குறளை என்ற கிராமத்தில் பிறந்து அவர் சென்னையில் மறித்தார். இது ஒரு வரி சரித்திரம். ஆனால் அத்தோடு அவர் சரித்திரம் நின்றதில்லை. கிராமத்தில் பிறந்து தமிழ்நாட்டில் வளர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகி அவர் சாதனைகளை செய்த பிறகு ஒரு மாநில தலைவராக அவர் முடிந்து விடவில்லை. அவருடைய மிகப்பெரிய பெருமை அவர் பெற்றுத் தந்த தேசிய அடையாளம் என்பதை தமிழ்நாட்டு மக்களும் இந்திய அரசியலும் மறக்க முடியாது என்றார்.
காரணம் அவர் முதன் முதலில் முதலமைச்சர்களுக்கு கோட்டையில் கொடியேற்றுவதற்கான உரிமையை பெற்று கொடுத்தார். அது தனக்கான உரிமை அல்ல தமிழ்நாட்டு முதலமைச்சர் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஆளுகிற முதலமைச்சர்களுக்கு அதைப் பெற்றுக் கொடுத்தார். இந்தியா முழுக்க, கம்யூனிஸ்டுகள் அரசாண்ட மேற்கு வங்கத்தில் கூட கை ரிக்க்ஷா ஒழிக்கப்படவில்லை. தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர் கருணாநிதி கை ரிக்க்ஷாக்களை ஒழித்து சைக்கிள் ரிக்க்ஷாக்களை அந்த தொழிலாளிகளுக்கு வழங்கினார். மேலும் செம்மொழி பெருமை பெற்று தந்தார்.
செம்மொழி என்பது அவர் தமிழுக்கு மட்டும் பெற்றுத்தந்த மகுடம் அல்ல உண்மையில் சொல்லப் போனால் தமிழுக்கு செம்மொழி அவர் பெற்று தருகிற வரைக்கும் செம்மொழி அங்கீகாரம் என்பது சமஸ்கிருதத்திற்கு இல்லை அது ஒரு மதிக்கத்தக்க மொழியாக இருந்தது என கூறினார். செம்மொழியாக தமிழ் உயர்வு பெற்ற பிறகுதான் சமஸ்கிருதத்துக்கு வந்த பெருமையை இந்த நாடு நீட்டித்தது என்பதை மறந்து விடக்கூடாது.
அவருடைய சாதனைகள் மற்றும் நிர்வாகச் சாதனைகளை மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய நிர்வாக குழுக்கள் சாதி உடலில் ஓடிக்கொண்டிருக்கின்றன என்று நாங்கள் மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். அவருடைய பெருங்கனவு ஒன்று உண்டு. தமிழ்நாட்டுக்கு இந்திய மாநிலங்களுக்கு சுயாட்சி. மாநில சுய ஆட்சி அவர் சொன்ன ஒரு கருத்தை நான் மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன். சுயாட்சி என்பது தன்னாட்சி அல்ல தனி ஆட்சி இதை முன்னிலைப்படுத்தி இந்திய மாநிலங்கள் அந்த உரிமைக்கு தொடர்ந்து போராட வேண்டும் அதுதான் கருணாநிதிக்கு இந்திய அரசியல் செய்யக்கூடிய மிகப்பெரிய காணிக்கை என வைரமுத்து தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்