33.3 C
Chennai
September 30, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு!

ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள், பரமகுடி சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி, வைகை ஆற்று படுகையை நனைக்கும் வகையில், வைகை அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆயிரம் மில்லியன் கன அடி வீதத்தில் 5 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram