உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகரில் ரஷ்ய ராணுவம் நுழைந்துள்ளது.
உக்ரைன் மீது 6வது நாளாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ரஷ்ய ராணுவம், உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகரில் சோதனைச்சாவடிகளை அமைத்து வருகிறது. இதனை அந்த மாகாண மேயர் இகோர் கோலிகாயேவ் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவிற்கு அருகே கெர்சன் நகரம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தையை நடத்த தாங்கள் தயாராக உள்ளதாக கஜகஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக கஜகஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: நீதிபதியை கத்தியால் குத்த முயற்சி: சேலத்தில் பரபரப்பு
மேலும், உக்ரைன் – ரஷ்ய போர் தொடர்பாக பல்வேறு அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்படுவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஷ்யாவில் இருந்து பகிரும் தகவல்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே, ரஷ்யாவில் இருந்து பகிரும் தகவல்களில் Flag குறியீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.