முக்கியச் செய்திகள் சினிமா

நடிகர் சூர்யாவுக்கு இரண்டு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஜெய்பீம் திரைப்படம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகர் சூர்யாவுக்கு இரண்டு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக பாமக தரப்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சூர்யா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாமகவினர் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து சென்னை தியாகராய நகர், ஆற்காடு தெருவிலுள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ஆயதப்படையை சேர்ந்த காவலர்கள் 5 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் சூர்யாவிற்காக பிரத்யேகமாக 2 ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சூர்யா தனது சொந்த விஷயம் மற்றும் அலுவலக காரணங்களுக்காக எங்கு சென்றாலும் 2 ஆயுதம் ஏந்திய போலீசார் உடன் இருந்து அவருக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மனைவியை சரமாரியாக தாக்கிய கணவன்; காவல் நிலையத்தில் சரண்

EZHILARASAN D

தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை,127 கோடி பணம் பறிமுதல்!

Jeba Arul Robinson

கொரோனா தடுப்பூசி பணி ஆமை வேகத்தில் உள்ளது: ராகுல்காந்தி சாடல்!