பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற திருச்சி மணப்பாறை கால்நடை சந்தையில் ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வாரந்தோறும் புதன்கிழமையன்று கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் கால்நடைகளை வாங்கி செல்வதற்காக திருச்சி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வர். இந்நிலையில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்கள் தற்போதிலிருந்தே ஆடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் இன்று காலையில் மிதமாக தொடங்கிய சந்தை நேரம் செல்ல,செல்ல ஆடுகள் விற்பனையில் வேகம் எடுத்தது. சுமார் 30கிலோ எடையுள்ள ஆடானது ரூ.30ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையில் விற்பனையானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று ஒரே நாளில் மட்டும் ரூ1கோடி வரையில் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
வேந்தன்