திருச்சி அருகே உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு பல்வேறு செலவினங்களுக்காக தமிழ்நாடு அரசு நிதி ஒதிக்கீடு செய்துள்ளது.
திருச்சி சமயபுரத்தை அடுத்த எம்ஆர் பாளையத்தில் செயல்பட்டு வரும் யானைகள் மறுவாழ்வு மையத்தில், தற்போது 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு நிதி பற்றாக்குறை இருப்பதால், போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மறுவாழ்வு மையத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இந்நிலையில், யானைகள் மறுவாழ்வு மையத்தில் பல்வேறு செலவினங்களுக்காக 98 லட்சத்து 27 ஆயிரத்து 610 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், யானைகளுக்கு பச்சை தீவனங்கள் வழங்க 62 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும், இதர பராமரிப்பு பணிக்காக 4 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயும், மருத்துவ செலவுகளுக்கு 2 லட்சத்து 59 ஆயிரத்து 998 ரூபாயும் ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.