கேரளாவில் செல்பி எடுக்க முயன்ற சுற்றுலா பயணியை யானை துரத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
செல்போன் வருவதற்கு முன் புகைப்படம் எடுப்பது எளிதான காரியம் அல்ல. ஒன்று கேமரா வைத்திருக்க வேண்டும் அல்லது கடைக்கு சென்று புகைப்படம் எடுக்க வேண்டும். சுற்றுலா தலங்களுக்கு செல்லும் போது ஆசை ஆசையாக எடுத்த போட்டோக்கள் வீட்டுக்கு வந்து பிரிண்ட் போட்டு பார்க்கும் போது ஒன்றும் இல்லாமல் போவதும் உண்டு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் தற்போது செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது மிக எளிதாகியுள்ளது. குறிப்பாக செல்பி எடுப்பது பேஷன் ஆகிவிட்டது. ஸ்டேடஸ் வைக்கவும் தங்கள் அழகு, ஆனந்தத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தவும் யாருடைய துணையுமின்றி செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இதில் சிறியவர் பெரியவர் என்ற விதிவிலக்கு இல்லை. அனைவரும் செல்பி எடுத்து ஆனந்தம் அடைகின்றனர். ஆனால் அது தற்போது எல்லை மீறி உயிரிழப்புகள் ஏற்படும் நிலைக்கு சென்றுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு அருகே முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள், அங்கு யானை நிற்பதை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தியுள்ளனர், அதில் ஒருவர் ஆர்வமிகுதியில் யானையின் அருகே சென்று செல்பி எடுக்க முயன்ற போது ஆத்திரம் அடைந்த யானை அவரை துரத்தியது. அவர் வேகமாக ஓடி குழிக்குள் விழுந்து, நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.