சுற்றுலா பேருந்து தீப்பிடித்து விபத்து: 12 குழந்தைகள் உட்பட 46 பேர் பரிதாப பலி

சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில் 12 குழந்தைகள் உட்பட 46 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்கேரிய நாட்டின் மேற்கு பகுதியில் உள்ளது சோஃபியா நகரம். இங்கிருந்து 48…

சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில் 12 குழந்தைகள் உட்பட 46 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பல்கேரிய நாட்டின் மேற்கு பகுதியில் உள்ளது சோஃபியா நகரம். இங்கிருந்து 48 கி.மீ தூரத்தில் உள்ள ஸ்ட்ருமா தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து ஒன்று இன்று காலை வந்துகொண்டிருந்தது. அதில் 50-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் பேருந்தில் திடீரென்று தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென எரிந்தது. அதில் இருந்த சிலர் காயத்துடன் தப்பினர். சிலர் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மீட்பு படையினர் விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 46 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பல்கேரிய அரசின உள்துறை அமைச்சக அதிகாரி நிகோலாய் நிக்கோலாவ் கூறும்போது, இந்த விபத்தில் 46 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.

விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த சுற்றுலா பயணிகள், தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள வடக்கு மாசிடோனியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஸ்கோப்ஜே நகருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.