விடுதலையானவர்களில் 4 பேரை சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கண்டனத்திற்குரியது – சீமான்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான 6 பேரில், 4 பேரை திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்து சென்று அங்கு அவர்களை முதல் நாளிலேயே கொடுமைப் படுத்தியிருப்பதாக வந்த செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான 6 பேரில், 4 பேரை திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்து சென்று அங்கு அவர்களை முதல் நாளிலேயே கொடுமைப் படுத்தியிருப்பதாக வந்த செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை தொடர்ந்து நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தங்கள் வாழ்நாளை கழித்த அவர்களின் விடுதலையை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்றனர்.

 

https://twitter.com/SeemanOfficial/status/1591686327468445696?t=PlPiVRBtEXN4Iqd5dEV0Rg&s=08

 

இந்நிலையில், விடுதலையானவர்களில் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகிய நான்குபேர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, விடுவிக்கப்பட்ட ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகிய நால்வரையும் திருச்சி, சிறப்பு முகாமுக்கு அழைத்துச்சென்று 15 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களுக்கு எந்தவித அறையும் ஒதுக்கீடு செய்ய வில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்களை ஓய்வெடுக்கவும் விடாது விடிய விடிய நாற்காலியிலேயே அமர வைத்திருந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார். நீண்ட நெடுஞ்சிறை வாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அவர்களை சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் அடைக்காது மாற்றிடத்தில் தங்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் நிலையில், முதல் நாளே சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது என சீமான் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.