தமிழ்நாடு முழுவதும் 444 உதவி ஆய்வாளர் பணிகளுக்கான தேர்வு நாளை நடைபெறவுள்ளது. 197 மையங்களில் தீவிர கண்காணிப்புடன் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள காவல் பணியிடங்களில் 399 தாலுக்கா உதவி ஆய்வாளர் மற்றும் 45 ஆயுதப்படை உதவி ஆய்வாளர் என 444 பதவிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 21 ஆயிரத்து 213 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்தி 77 ஆயிரத்தி 221 பேரும், பெண்கள் 43 ஆயிரத்து 949 பேரும், திருநங்கைகள் 43 பேரும் இதுவரை தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 197 தேர்வு மையங்களில், எழுத்துப் பூர்வமாக தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 8 ஆயிரத்து 586 பேர் விண்ணப்பித்துள்ளனர். சென்னை காவல் ஆணையராக காவல் அலுவலகத்தில் மட்டும் தேர்வு எழுதுவதற்கு வசதியாக 10 மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் மொத்தமாக 8 ஆயிரத்து 493 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் மட்டும் 12 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் 8 ஆயிரத்து 590 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் நாளை 197 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவதால், தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடக்காத வண்ணம் தேர்வை கண்காணிக்க, மையங்கள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது கண்காணிப்பில் உள்ளன.
அதுமட்டுமின்றி வினாத்தாள்கள் மற்றும் தேர்வுத் தாள்களை எடுத்துச் செல்லக் கூடிய வாகனங்களை ஜிபிஎஸ் கருவி உடன் பொருத்தி, அதனை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் இருந்து, இணைய வழி சர்வர் மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளன.
தேர்வு எழுத வருபவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற, கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது