மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை இந்த திட்டத்தின் வழியாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில்…

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை இந்த திட்டத்தின் வழியாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பலன்பெறத் தகுதியான மாணவியரின் விவரங்களை https://penkalvi.tn.gov.in இணையதளத்தில் வரும் 30-ம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘9 மாத பெண் குழந்தை பாத்ரூமில் இருந்த தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு’

மேலும், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை பயின்று அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதிக் கல்லூரிகள் / நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடரும் மாணவியர் இத்திட்டத்தில் பயன்பெறுவார் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தகுதியான மாணவியரின் பள்ளி TC, 10, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, ஆதார், வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். ஓடிபி எண் ஆகியவை கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.