தூத்துக்குடி பனிமய மாதா பேராலாயத்தில் பெண்களுக்கான சிறப்பு திருப்பலி!

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தங்க தேர் திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்ச்சியாக பெண்களுக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது.  இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர். துாத்துக்குடியில் உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேரலாயத்தில் தங்க…

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தங்க தேர் திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்ச்சியாக பெண்களுக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது.  இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.

துாத்துக்குடியில் உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேரலாயத்தில் தங்க தேர் திருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  இதனையடுத்து ஏழாம் நாளான நேற்று  உலகிலுள்ள அனைத்து பெண்களின் நன்மைக்காகவும், பாதுகாப்புக்காவும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.  இதில் ஆயிரக்கணக்கான பெண்கள், அருள் சகோதரிகள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டு சென்றனர்.
—அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.