7 ஆயிரத்து 381 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, ஜூலை 24-ந் தேதி நடைபெறும் எனவும், நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
சென்னையில் டிஎன்பிஎஸ்சி அலுவலக வளாகத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 7 ஆயிரத்து 381 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தார். இத் தேர்வுகளுக்கு நாளை முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அவர் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதன்முறையாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டுவசதி வாரியங்களில் உள்ள 163 பணியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்படவுள்ளதாக தெரிவித்த அவர், இதில் 81 பணியிடங்கள் விளையாட்டுப் பிரிவினர் மூலம் நிரப்பப்படும் எனவும் தெரிவித்தார். குரூப் 4 தேர்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மூன்று மணி நேரம் நடைபெறும் எனவும்,
இந்தத் தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும் எனவும், இதில் 100 கேள்விகள் தமிழ் மொழி தொடர்பானதாவும், 75 கேள்விகள் பொது அறிவு தொடர்புடையதாகவும் இருக்கும் எனவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். குரூப் 4 தேர்வு முடிவை அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும், நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.