தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, காவலர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் கட்டாயத் தமிழ் தேர்வில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தெரிவு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1, 2 2ஏ போன்ற இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகளில் முதன்மை எழுத்துத் தேர்வான கட்டாய தமிழ் மொழித் தாள் தகுதித் தேர்வில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டுமல்லாமல் மாநிலத்தின் மற்ற தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மற்றும் நியமன அலுவலர்களால் தேவைப்படும் தேர்வுகளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளுக்கும் இது பொருந்தும். 40 சதவீத்துக்கு கீழ் குறைபாடுகள் உடைய மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கும் விலக்கு பொருந்தும்.
இவ்விலக்கைப் பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் உரிய மாற்றுத் திறனாளி சான்றிதழ் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.