தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் வழக்கம்போல் 8 அணிகள் களமாடுகின்றன. இதுவரை இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள் ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த ஆண்டு டிஎன்பிஎல் போட்டியில் முதன்முறையாக வீரர்கள் ஏலம் முறையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே டிஎன்பிஎல் நிர்வாகக் குழு ஒவ்வொரு உரிமையாளரும் 2 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளமுடியும்.
இன்று 12 மணிக்கு இந்த வீரர்களுக்கான ஏலம் தொடங்கியது. முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக விளையாடிய 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். விஜய் சங்கரை 10.25 லட்சம் ரூபாய்க்கு திருப்பூர் தமிழன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. வாஷிங்டன் சுந்தரை 6.75 லட்ச ரூபாய்க்கு மதுரை பாந்தர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை 6.25 லட்சத்துக்கு திருச்சி அணி ஏலம் எடுத்தது.
கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியரை நெல்லை அணி 8.5 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஏ பிரிவில் கடைசி வீரரான வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது. இதன்பிறகு பி பிரிவு வீரர்கள் ஏலம் நடந்தது. பி பிரிவில் இடம்பெற்ற பாபா அப்ரஜித்தை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ரூ.10 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.
சஞ்சய் யாதவை 17.60 லட்ச ரூபாய்க்கும் சோனு யாதவை நெல்லை ராயல் கிங்ஸ் அணி 15.20 லட்ச ரூபாய்க்கும் ஏலம் எடுத்தது. முருகன் அஸ்வினை மதுரை பாந்தர்ஸ் அணி 6.40 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
அண்மைச் செய்தி:”கம்யூனிஸ்ட்டுகள் குறித்த பெரியாரின் கருத்துக்கு பதில் சொல்வாரா பொன்முடி” – அண்ணாமலை கேள்வி
திருப்பூர் தமிழன்ஸ் அணி சாய் கிஷோரை 13 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. சாய் சுதர்சனை 21.60 லட்ச ரூபாய்க்கு லைகா கோவை கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.







