கோவை தெற்கு தொகுதியில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் பணியாக கோவை இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் போதை வஸ்துக்களை விற்கும் கயவர்களை ஒழிப்பதே தனது முதல் பணி என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். கடந்த இரு தினங்களாக அவர் கோவையில் பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில், கோவையில் இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் போதை வஸ்துக்கள் விற்கும் கயவர்களை ஒழிப்பதே தமது முதல் பணி என கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.







