தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12 ஆயிரத்து 772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 12 ஆயிரத்து 772 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 66 ஆயிரத்து 493 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றில் இருந்து 25 ஆயிரத்து 561 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 21 லட்சத்து 99 ஆயிரத்து 808 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 254 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையிலும் புதிதாக 828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 பேர் உயிரிழந்துள்ளனர். 1454 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஈரோட்டில் 1295 பேருக்கும் செங்கல்பட்டில் 522 பேருக்கும் திருப்பூரில் 781 பேருக்கும் சேலத்தில் 796 பேருக்கும் கோவையில் 1728 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.







