அதி கனமழை எச்சரிக்கை; தலைமைச் செயலாளருடன் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஆலோசனை

அதி கனமழை  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலில், தலைமைச்செயலாளருடன் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ள நிலையில், இது…

அதி கனமழை  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலில், தலைமைச்செயலாளருடன் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ள நிலையில், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.

பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 07-ம் தேதி மாலை புயலாக வலுவடையக்கூடும் எனவும், இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 08 மற்றும் 09ம் தேதிகளில் வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும். அதனால் அதி கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அரசு சார்பாக முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்புவை தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்தரன் சந்தித்தார். வானிலை நிலவரம் குறித்து தகவலை பகிர்ந்துகொண்டதுடன், அதன் போக்கு குறித்தும் எடுத்துரைத்துள்ளார். இதனையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் எடுத்துரைப்பார் எனத் தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.