திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை சீரமைப்பு பணியின் போது இருவேறு இடங்களில் நின்றிருந்த கார்களை அகற்றாமல் அதனை சுற்றி மட்டும் சாலையை சீரமைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சாலைகள் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இதனைபோன்றே திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பழுதடைந்த சாலைகள் சீரமைப்பு மற்றும் புதியதாக சாலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
மழைக்காலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் சாலைகளை சீரமைப்பதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் மாநகராட்சி எல்கைக்கு உட்பட்ட பகுதியான பின்னி காம்பவுண்ட் வீதியில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. இப்பணியானது போக்குவரத்திற்கு தடையில்லா விதமாக இரவில் நடந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது சாலையின் இருவேறு இடங்களில் நிறுத்தப்பட்ட கார்களை அகற்றாமல் அதனை தவிர்த்து மற்ற இடங்களில் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே சாலைகள் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் அதிலும் இது போன்று நடப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வேந்தன்