மணிப்பூரில் அமைதி திரும்பி வருகிறது; மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுகின்றன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் சுதந்திர நாள் விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி இன்று காலை கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையின்போது மணிப்பூர் குறித்தும் பேசினார்.
மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:
மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. தற்போது அங்கு அமைதி திரும்பி வருகின்றது. அமைதியால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுகின்றன. மணிப்பூர் வன்முறையில் பலர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த நாடும் மணிப்பூர் மக்களுடன் துணை நிற்கின்றது.
இவ்வாறு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் மணிப்பூர் குறித்து பேசினார்.







