திருப்பத்தூர் அருகே 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களை வீடு தேடிச் சென்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கௌரவித்த சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இதுவரை நடந்த தேர்தல்களில் வாக்களித்தும், இனி வரும் தேர்தல்களில் இடைவிடாது தொடர்ந்து வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் திருப்பத்தூர் மாவட்டப் பகுதிகளில் வசித்து வரும் 80வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தும் நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஈடுபட்டு வருகிறார்.
மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த முதியவர்கள் சிலர் தங்களுக்கு இதுவரையில் முதியோர் பென்ஷன் கிடைக்கவில்லை என்பதை குற்றச்சாட்டாக தெரிவித்தனர்.இதனை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், தகுதி இருப்பின் தங்களுக்கு நிச்சயமாக முதியோர் உதவி தொகை வழங்கப்படும் எனவும், விரைவில் இதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வேந்தன்