உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 13-ம் தேதி நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை 1.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஷ்வரூப தீபாராதனையுடன், 2.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனைத் தொடர்ந்து கோயில் உள்பிரகாரத்தில் உள்ள செப்புக்கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அதிகாலை 05.20 மணிக்கு ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலாகத் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. தொடாந்து கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமாகி மகா தீபாராதனை நடைபெற்றன. நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், இணை ஆணைையர் மு.கார்த்திக், திருக்கோயில் பணியாளர்கள், ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த ஆவணி திருவிழாவில் நாள்தோறும் சுவாமியும் அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சிகள் நடைபெகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 10-ம் தேதி 7ம் திருநாளன்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்திலும், 11-ம் தேதி 8ம் திருநாள் பச்சைசாத்தி கோலத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10ம் திருநாள் 13-ம் தேதி நடைபெகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பிலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.