முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

வெங்கைய்யா நாயுடுவிற்கு திருச்சி சிவா முன்வைத்த நெகிழ்ச்சி கோரிக்கை.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது, கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடர் மாநிலங்களவையில் இன்று நிறைவு பெற்றது. இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவருக்கான பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதனையொட்டி மாநிலங்களவையில் வெங்கைய்யா நாயுடுவுக்கு வழியனுப்பும் விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று வெங்கையா நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் திமுக சார்பில் எம்பி திருச்சி சிவா பேசியதாவது, “நாடாளுமன்றத்தில் உரையாடுகின்றவர்கள் அவரவரின் தாய் மொழிகளில் உரையாடுவதற்கு ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவித்தார். பிராந்திய மொழிகளுக்காக தாங்கள் தொடர்ந்து வாதிட்டிருக்கிறீர்கள் என்றும் கூறினார்.

மேலும் வெங்கையா நாயுடு உறுப்பினர்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தினார் என்றும், அவர் எப்போதும் உறுப்பினர்களின் சிறிய கவலைகளுக்கும் கூட செவிமடுத்தார் என்றும் கூறினார். இந்த சபைக்கு நீங்கள் அளித்த பங்களிப்பை நான் மறக்க மாட்டேன், என்றும் அவர் பேசினார். நான் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அது என்னவென்றால் நீங்கள் உங்களது சுயசரிதையை எழுத வேண்டும். கடைசியாக, ஒரே ஒரு வார்த்தையை மட்டும் சொல்லி கொள்கிறேன், நாங்கள் உங்களை இழக்கிறோம், ஐயா என்று உருக்கமுடன் பேசியிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.46 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

Web Editor

மழையால் பாதிப்படைந்த நெற்கதிர்களை கொள்முதல் செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Web Editor

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல்!

Gayathri Venkatesan