பெங்களூரு பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவில் வனத்துறையினரின் ரோந்து வாகனத்தை வங்கப் புலி ஒன்று கடித்து குதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பன்னேர்கட்டா உயிர் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் புலி உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் சமீபத்தில் இந்த உயிரியல் பூங்காவில் ரோந்து சென்றபோது வனத்துறையினரின் வாகனம் வனப்பகுதிக்குள் நின்றது. அப்போது அதனை கண்ட வங்கப்புலி ஒன்று ரோந்து வாகனத்தின் பின்புறத்தை கடித்து குதறியது. இதில் காரின் பின்புற பக்கவாட்டில் சேதம் ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பான வீடியோவை உயிரியல் பூங்கா நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.