தூத்துக்குடியில் சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு காடுகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுவரில் பல வகையான ஓவியங்களை வரைந்து பள்ளி மாணவ, மாணவிகள் அசத்தினர்.
காடுகளை பாதுகாப்பதின் அவசியத்தை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொறு ஆண்டும் மார்ச் 21ம் தேதி சர்வதேச காடுகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி தூத்துக்குடியில் மாவட்ட வனத்துறை, டிரையல் பிளேசர் ரோட்டரி சங்கம் மற்றும் இயற்கை சார் வளகாப்பு மையம் மணிமுத்தாறு ஆகியவை கூட்டாக இணைந்து
பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சுவர் ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை வன அலுவலர் அபிஷேக்தாமோர், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரங்க சுவரில் வல்லநாடு வெளிமான் சரணாலயத்திலுள்ள மான்கள்,அணில்கள்,பறவைகள்,பாம்பு இனங்கள் உள்ளிட்டவைகளின் ஓவியங்கள் மாணவ,மாணவிகள் தத்துரூபமாக வரைந்தனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளும்,
பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன,ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—வேந்தன்