சிம்புவுக்கு இதுதான் மிகப்பெரிய ஓபனிங்!

மனுவை விசாரித்த நீதிபதி மீதான விசாரணையைச் செப்டம்பர் 21ஆம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளார் .இதனால் நாளை இந்த படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என்பதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கவுதம் மேனன்…

மனுவை விசாரித்த நீதிபதி மீதான விசாரணையைச் செப்டம்பர் 21ஆம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளார் .இதனால் நாளை இந்த படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என்பதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் திரைக்கு வரவுள்ள படம் தான் வெந்து தணிந்தது காடு. சித்தி இடனானி,ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து, இப்படத்திலும் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானே இசையமைக்கிறார்.

இந்நிலையில் படத்துக்குத் தடை விதிக்க கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரேவதி, ஒப்பந்தம் செய்தது உண்மைதான் என்றும் அடுத்த படத்தை இயக்கும் முன் மனுதாரருக்கு வழங்க வேண்டிய பணத்தைத் திருப்பி வழங்கி விடுவதாகவும், இது சம்பந்தமாக மனுதாரருடன் சமரசம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் மனுவை விசாரித்த நீதிபதி மீதான விசாரணையைச் செப்டம்பர் 21ஆம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளார் .இதனால் நாளை இந்த படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என்பதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாக உள்ளது. குறிப்பாகக் காலை சிறப்புக் காட்சிகள் மட்டும் 200 திரைகளில் வெளியாக உள்ளது. இதுவரை வெளியான சிம்பு படங்களில் இந்த படம் தான் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.