கஞ்சா தமிழகத்துக்குள்ள எப்டி கடத்தி வரப்படுது…. எந்தெந்த வழிகள்ள வருது.. என்னென்ன போதை பொருட்களையெல்லா பயன்படுத்துறாங்கன்றத இப்ப பாக்கலாம்
போதைப்பொருட்கள் தமிழகத்துக்குள்ள பல வழிகள்ள கடத்தப்பட்டு வருது. குறிப்பா ரயில்கள், பேருந்துகள், சரக்கு வாகனங்கள் மூலமாதா கடத்தி வர்ரபடுறதா காவல்துறையினர் சொல்றாங்க. ஆந்திர மாநிலம் குண்டூர் மலை பகுதியிலதா கஞ்சா செடிகளோட விளச்சல் அதிகமா இருக்குறதா சொல்லப்படுது. சோ அங்க இருந்துதா தமிழகத்துக்குள்ள கஞ்சா நுழையிறதா போலீஸ் சொல்றாங்க. குறிப்பா ஆந்திரா எல்லைகள்ள இருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியா கஞ்சா தமிழகத்திற்குள் நுழையிது.ரயில் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மட்டு இல்லாம இருசக்கர வாகனங்கள்ள கூட கஞ்சா கடத்தி வரப்படுது. தமிழகத்துல திருவள்ளூர் மாவட்டம் மற்றும் மாவட்ட எல்லைகள்ல தா அதிகளவுல கஞ்சா பறிமுதல் செய்யப்படுற்அதா காவல்துறையினர் சொல்றாங்க.இதேமாதிரி மற்றொரு வழித்தடமான விசாகப்பட்டினத்துல இருந்து ராஜமுந்திரி, விஜயவாடா, நெல்லூர் வழியாக சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்படுது. அதுக்கப்பரம் அங்க இருந்து மத்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுறது போலீஸ் விசாரணையில தெரியவந்துருக்கு. ஆந்திரால இருந்து வர்ரது இந்திய வகை கஞ்சா. சோ தமிழ்நாட்டுக்கு இந்தியால இருக்கக்கூடிய மத்த மாநிலங்கள்ள இருந்து கஞ்சா வர்ரது மட்டு இல்லாம் வெளிநாடுகள்ள இருந்துக்கூட இறக்குமதி செய்யப்படுது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நெதர்லாந்து பட் னு சொல்லக்கூடிய முதல் தர கஞ்சா, மணிப்பூர், நாகலாந்தில் இருந்து கடத்திவரப்படுற உலர்ந்த கஞ்சாவு தமிழகத்துக்கு கடத்திவரப்படுறதா காவல்துறையினர் தெரிவிக்கிறாங்க. ஏர்போட் மட்டு இல்லாம கடல் வழியாவு கஞ்சா கடத்தப்பட்டு வருது. ஆந்திரால இருந்து தமிழகம் வழியா ராமநாதபுரம், அங்க இருந்து பக்கத்து மாவட்டத்துல இருக்குற கடற்கரைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு. அதுக்கப்பரம் அங்க இருந்து இலங்கைக்கு கடத்தப்படுறதாவு போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சொல்றாங்க. இதனால ஆந்திர – தமிழக எல்லையில காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி தமிழகத்திற்குள் கஞ்சாவ நுழைய விடாம தடுத்து தீவிர சோதனையில ஈடுபட்டிருக்குறாங்க.என்னென்ன வகையிலைலா இந்த போதை பொருள் இருக்கு அத எப்டி பயன்படுத்துறாங்கன்னா… முன்னாடி புகையில, அபின், பான் மசாலா, குட்கா, மதுபானம் , கஞ்சா இந்த போதை பொருட்கள்தா பெருவாரியான போதை விரும்பிகள் மத்தியில பயன்படுத்தப்பட்டுச்சு… அதுக்கபரம் எல்.எஸ்.டி, கொக்கைன், மாதிரியான உயர் தர போதை பொருள பயன்படுத்துனாங்க.. இப்டி இருக்கையில சமையலுக்கு பயன்படுத்துற கசகசால இருந்து புற்றுநோயாளிகளுக்கு கொடுக்கப்படுற வலிநிவாரணி வரைக்கு மக்கள் பயன்பாட்ல இருக்கக்கூடிய பல இதுல இருந்து போதை பொருள்ள எடுக்குறாங்க… ஒரு சில குறிப்பிட்ட மாத்திரைகள்ள பொடி ஆக்கி ஊசி மூலமாவு செலுத்திட்டு போதை அடையிறாங்க. போதையவே ஒழிக்கனும்னு அரசு காவல்துறையு சமூக ஆர்வலர்களு சொல்லிட்டே இருந்தாலுங்கூட இருக்குற போதை பத்தலனு போதைக்கான வடிவத்த மாத்திட்டே இருக்குறாங்க போதை பிரியர்கள்….