தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் அஞ்சலக செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடக்கவிழா அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தலைமையில் நடந்தது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்
1 முதல் 10 வயதுக்குட்பட்ட அனைத்து பெண் குழந்தைகளுக்கும் அஞ்சலக செல்வமகள்
சேமிப்பு கணக்கு திட்டத்தை ஒவ்வொறு பெண்குழந்தைகளுக்கும் தமிழக அரசு தலைமை கொறடா கோவி செழியன் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.500 வீதம் செலுத்தி துவங்கி
வைத்து திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவிடைமருதூர், கோவிந்தபுரம், பருத்திக்குடி,ஆண்டலாம்பேட்டை,வண்ணக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்குழந்தைகளுக்கான அஞ்சலக செல்வமகள் சேமிப்புதிட்டம் தொடக்கவிழா திருவிடைமருதூரில் உள்ள கலைஞர் பாசறை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருவிடைமருதூர் பேரூராட்சி மன்ற துணை தலைவர் சுந்தர ஜெயபால் வரவேற்புரை ஆற்றினார். திருவிடைமருதூர் பேரூராட்சி தலைவர் புனிதா மயில்வாகனன், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, கூகூர் ஊராட்சி தலைவர் அம்பிகாபதி, திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய துணைப்பெருந்தலைவர் கோ.க அண்ணாதுரை, தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழக அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமை வகித்து
செல்வமகள் சேமிப்புதிட்டம் கணக்குகளை தொடங்கி வைத்தார். திருவிடைமருதூர்
பேரூராட்சி துணை பெருந்தலைவர் சுந்தர ஜெயபால் தனது சொந்த செலவில் தலா ரூ.500 வீதம் 100க்கும் மேற்பட்ட பெண்குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புதிட்டம் கணக்கு
தொடக்கத்திற்கு நிதி உதவி வழங்கினார்.
ரெ. வீரம்மாதேவி







