திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயா் திருகோயில் பங்குனி திருக்கல்யாண பிரம்மோஸ்தவ திருத்தோ் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ அழகிய நம்பிராயா்
திருகோயில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மை ஆனது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் பங்குனி திருக்கல்யாண பிரம்மோஸ்தவம் ராமானுஜ ஜீயா் சுவாமிகள் முன்னிலையில் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதி புறப்பாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதற்காக அதிகாலை 5.30 மணிக்கு திருகோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவர் அழகிய நம்பி திருத்தோில் ரதாரோஹணம் நடை பெற்றது. இராமானுஜ ஜீயா் சுவாமி கள் தேருக்கு ஏழுந்தருள அங்கு சுவாமிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனை தொடா்ந்து, காலை 9.00 மணிக்கு மேஷ லக்னத்தில் ஜீயா் சுவாமிகள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன், திமுக மாவட்ட செயலாளா் ஆவுடையப்பன், முக்கிய அதிகாரிகள் மற்றும் ஊா் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்களின் கோவிந்தா கோபாலா என்ற கோஷங்களுடன் தோ் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது. கலந்துகொண்ட பக்தா்களுக்கு குளிா்பானங்கள், மோா், தண்ணீா் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.