“தந்தையின் வாதங்களை எதிர்கொள்ள முடியாமல் என்னை தாக்குகிறார்கள்”

சிபிஐ விசாரணையை நேரலை செய்ய வேண்டும் என்றும் தன் தந்தை ப.சிதம்பரத்தை குறிவைக்க தன்னை தாக்குகிறார்கள் என்றும் கார்த்திக் சிதம்பரம் எம்.பி தெரிவித்துள்ளார்.   டெல்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த கார்த்திக் சிதம்பரம்…

சிபிஐ விசாரணையை நேரலை செய்ய வேண்டும் என்றும் தன் தந்தை ப.சிதம்பரத்தை குறிவைக்க தன்னை தாக்குகிறார்கள் என்றும் கார்த்திக் சிதம்பரம் எம்.பி தெரிவித்துள்ளார்.

 

டெல்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த கார்த்திக் சிதம்பரம் எம்பி க்கு காங்கிரஸ் தொண்டர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கார்த்திக் சிதம்பரம், வருமான வரி சோதனை என்பது தனக்கு புதிதல்ல என்றும், 6 முறை சோதனை நடத்தி எதை கண்டு பிடித்தார்கள் என்றும், இந்தியாவில் இதுவரை யாரையும் ஆறு முறை சோதனை செய்ததில்லை என்றும் தெரிவித்தார்.

என் மீது போடப்பட்ட வழக்கில் உண்மையான குற்றசாட்டு இல்லை என்றும் புலன் விசாரணை என்ற பெயரில் மன உலைச்சல் தரும் முயற்சி தான் என்றார். 27 மணி நேரம் தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாக கூறிய அவர், சிபிஐ என்ன கேள்வி கேட்டனர் என்பதை வெளியிடாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பிய கார்த்திக் சிதம்பரம் விசாரணையை நேரலை செய்ய வேண்டும் என்றார். தன் தந்தை ப.சிதம்பரம் வைக்கும் வாதங்களை எதிர்கொள்ள முடியாமல். என்னை தாக்குகிறார்கள் என்றும் என் தந்தையை குறிவைக்க மத்திய அரசு எடுக்கும் முயற்சி தான் இது என்றும் கார்த்திக் சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

 

காங்கிரஸ் கட்சியில் இருந்து கபில் சிபில் வெளியேறியது வருத்தம் தான் என தெரிவித்தார். அவர் ஒரு சிந்தனையாளர் என்றும் எனினும் சுயேச்சையாக தான் தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.