28.9 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இந்த பட்ஜெட்டில் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருக்காது – தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர்

கடந்த ஆண்டு பட்ஜெட் போல இந்த பட்ஜெட்டிலும் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருக்காது என தமிழ்நாடு நிதியமைச்சர் பழநிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்கே சாலையில் உள்ள தனியார் விடுதியில் 2030 ஆம் ஆண்டுக்குள்
ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கியும் இதை ஏதுவாக்கும் சுழலமைப்பை
உருவாக்குதல் என்ற தலைப்பில் அசோசேம் தமிழ்நாடு மாநில வளர்ச்சி கவுன்சில் நடத்தும் கருத்தரங்கை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொள்கை சூழல், உட்கட்டமைப்பு மற்றும் லாஜிஸ்டிக்ஸ், வலுவான கடன் அணுகு வசதி
மற்றும் வளங்களுக்கு ஏதுவாக்கும் சூழல் அமைப்பை உருவாக்குவது, திறனளிப்பு
கொள்முதல் மற்றும் உள்ளீடுகளை சிறப்பாக ஆக்குதல், சாதகமான சந்தை மற்றும்
தேவைநிலைகள் மற்றும் இணைப்பு வசதி உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் கருத்தரங்கில்
விவாதிக்கப்பட உள்ளன.

இன்றைய நாள் முழுவதும் நடைபெறும் கருத்தரங்கில் அரசு துறைச் செயலாளர்கள்
தொழில்துறையைச் சேர்ந்த ஆளுமைகள் உரையாற்றுகிறார்கள்.

கருத்தரங்கை துவக்கி வைத்து சிறப்புரையாற்றிய நிதியமைச்சர் பழனிவேல்
தியாகராஜன் கூறியதாவது..

” தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக மாற்றுவதில் உலக
பொருளாதார நிலையின் பங்கும் இருக்கிறது. அதன் இலக்கை அடைய பல்வேறு
காரணிகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. உலகப் பொருளாதாரம் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடந்த 1.5 ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதாரம் தற்போது சராசரியான நிலைக்கு
திரும்பி இருக்கிறது. மாநிலத்தில் கடந்த பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு நல்ல
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சி தான் நான் முதல்வன் போன்ற
திட்டங்கள்.

2006 முதல் 2011 காலகட்டத்திற்குப் பிறகு 2011 முதல் 2020 ஆம் ஆண்டு தொடக்கம் வரை மாநிலத்தின் ஜிடிபி என்பது 23.7 சதவீதத்திலிருந்து 11.5 சதவீதமாக குறைந்தது.  அதிமுக ஆட்சி என்பது மட்டுமல்லாமல் அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு காரணங்கள் இதற்கு இருக்கிறது . கடந்த ஆண்டு பட்ஜெட் போல இந்த பட்ஜெட்டிலும் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருக்காது .வளர்ச்சியை அடைய புதிய வழிகளை இன்று தேட வேண்டும்  இம்மாதிரியான கருத்தரங்கங்கள் அதற்கு முக்கிய வழிவகுக்கும்” என பிடிஆர் பழநிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading